பாலக்கோடு அருகே ஶ்ரீஅக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழாவில் சீறி பாய்ந்த காளைகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 மே, 2024

பாலக்கோடு அருகே ஶ்ரீஅக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழாவில் சீறி பாய்ந்த காளைகள்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஹள்ளி கிராமத்தில் ஶ்ரீஅக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா  கடந்த 6 நாட்களாக  வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.


இத்திருவிழாவின் 7வது நாளான இன்று  எருது விடும் நிகழ்ச்சியில் 12 கிராமங்களை சேர்ந்த  காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராம மக்கள் மேளா தாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை செய்து  காளைகளின் மேல் புனித நீர் தெளித்த உடன் எருதாட்டம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட  காளைகள் கோவிலை சுற்றி ஒவ்வென்றாக திறந்து விடப்பட்டன சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர்.


இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட பாலக்கோடு போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad