செயற்குழு கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியம், பேரூர், ஊராட்சி, வார்டு தோறும் கழக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடுதல், மற்றும் இல்லந்தோறும் கலைஞர் 100 என்ற வரியுடன் கோலமிட்டு, விளையாட்டு போட்டிகள் நடத்தி இளைஞர்களை ஊக்குவித்தல்,
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 1061கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் ,
20 கழக மூத்த முன்னோடிகளுக்கு இல்லங்களுக்கு நேரில் சென்று பொற்கிழி வழங்கிய மாண்புமிகு அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தும் , 1 இலட்சத்து 53 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும்
2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று கழக வெற்றி கொடியினை ஏற்றி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் விதமாக வெற்றியினை காணிக்கை ஆக்குவோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக