ஆத்துக்கொட்டாய் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் பஸ் டிரைவர் படுகாயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 மே, 2024

ஆத்துக்கொட்டாய் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் பஸ் டிரைவர் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த கரகூர் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் (வயது .36), இவர் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

நேற்று பாலக்கோடு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார், ஆத்துக் கொட்டாய் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் முனியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது இதில் முனியப்பன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை  மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


விபத்து குறித்து முனியப்பன் மாரண்டஅள்ளி போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad