தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் காவல் நிலைய போலீசார் நேற்று மாலை கொத்தலம் - சின்ன வரட்டம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெரியகாட்டு கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரம் உள்ள முட்புதரில் நாட்டு துப்பாக்கி இருந்ததை கண்டு அதனை மீட்டனர். மர்ம நபர்கள் இரவு நேரங்களில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்த நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்திருக்கலாம் என்றும், தற்போது வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான நடிவக்கை எடுத்து வருவதால் போலீசுக்கு பயந்து துப்பாக்கியை முட்புதரில் வீசி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக