பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பிறப்பு - இறப்பு சான்றிதழ் குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 மே, 2024

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பிறப்பு - இறப்பு சான்றிதழ் குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில்  பிறப்பு - இறப்பு சான்றிதழ் குறித்த சிறப்பு முகாம் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி தலைமையில் நடைபெற்றது. 


இம்முகாமில்  ஒரு வருடத்திற்கு மேலாக தாமதமாக பதிவு செய்த பிறப்பு மற்றும் இறப்பு  மனுக்கள்  மீது விசாரணை செய்து உடனடி ஆணை வழங்க நடவடிக்கை   மேற்கொள்ளப்பட்டது.


இம்முகாமில் மொத்தம் 52 மனுக்கள்  பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இதில் பிறப்பு  சான்று கோரிய 10 மனுக்கள் மற்றும் இறப்புச் சான்று கோரிய  37 மனுக்கள் என மொத்தம் 47  மனுக்களுக்கு விசாரணை செய்து உடனடியாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழுக்கான ஆணையை பயனாளிகளுக்கு தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் காயத்திரி வழங்கினார். மீதமுள்ள மனுக்களை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தினார்.


இம்முகாமில் தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் ஜெகதீசன் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad