பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் குறைந்த மின்னழுத்தத்தை போக்க பூஸ்டர் மின்மாற்றி அமைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 மே, 2024

பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் குறைந்த மின்னழுத்தத்தை போக்க பூஸ்டர் மின்மாற்றி அமைப்பு.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ள பாளையம் கிராமம் இந்த கிராமத்தில் போதிய மின் அழுத்தம் இல்லாமல் இருந்து வந்தது. இப்பகுதியை சுற்றியுள்ள சுமார் ஐந்து  கிராமங்கள் உள்ள நிலையில் இவற்றுக்கு தேவையான அளவு மின்சாரம் விநியோகம் இல்லாமல் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வந்தது. 


இந்நிலையில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின்சார பிரச்சினையை சரி செய்வதற்காக 1000 கேவி திறன் கொண்ட பூஸ்டர் மின்மாற்றி அமைக்க மின்வாரியம் மூலம்நடவடிக்கை எடுக்கப்பட்டது. தர்மபுரி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் திருமதி சுமதி அவர்களின் அறிவுரைத்தலின் பேரில் பாளையம் கிராமத்தில் 100 kva பூஸ்டர் மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதை அடுத்து பூஸ்டர் இன்று மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மின் பகிர்மான வட்டம் மேற் பார்வை பொறியாளர் திருமதி. சுமதி , பாலக்கோடு கோட்ட மின்வாரிய பொறியாளர் திருமதி. வனிதா, உதவி செயர் பொறியாளர்கள் திருமதி அழகுமணி, திரு.மோகன்குமார், உதவி பொறியாளர்  திருமதி. சத்யா மற்றும் மின் வாரிய பணியாளர்கள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad