பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நாளை நடைபெறும் கலைஞர் 101 வது பிறந்த நாள் விழாவில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 ஜூன், 2024

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நாளை நடைபெறும் கலைஞர் 101 வது பிறந்த நாள் விழாவில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு.


பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு  நாளை நடைபெறும் கலைஞர் 101 வது பிறந்த நாள் விழாவில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, திமுக பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி தலைவருமான பி.கே.முரளி அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழக முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி, நாளை ஜூன். 3ம் தேதி திங்கட்கிழமை காலை  9.30 மணிக்கு, பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற உள்ளது.


அது சமயம் பாலக்கோடு பேரூர் கிளைக் கழகச் செயலாளர்கள்,  கழக நிர்வாகிகள், கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு கலைஞர் பிறந்த நாள் விழாவை சிறப்பிக்க  அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad