பாலக்கோடு அருகே கவுண்டனூர் கிராமத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 101வது பிறந்த நாள் விழா- இனிப்பு வழங்கி கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஜூன், 2024

பாலக்கோடு அருகே கவுண்டனூர் கிராமத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 101வது பிறந்த நாள் விழா- இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கவுண்டனூர் கிராமத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 101வது பிறந்த நாள் விழா திமுக கவுன்சிலர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.


முன்னதாக திமுக கிளை கழகத்தின் சார்பாக கவுண்டனூர் பஸ்நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் அருண்பாண்டி, ராமன், மாரியப்பன், மாதப்பன், வேலு, கிருஷ்ணன், கோபால், அர்சுணன், முனியப்பன் மற்றும் திமுக கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad