பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் கருணாநிதி 101 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஜூன், 2024

பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் கருணாநிதி 101 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் கொண்டாடப்பட்டது.


இதில்  மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் பாலக்கோடு எம்.எல்.ஏ வெங்கடாசலம், முன்னாள் பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முன்னதாக  பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் திருஉருவ படத்திற்க்கு பேருராட்சி தலைவரும், திமுக பேரூர் கழக செயலாளருமான பி.கே.முரளி அவர்கள்  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கழக நிர்வாகிகள் தொண்டர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில்  ஒன்றிய துணை செயலாளர் பி.எல்.ஆர்.ரவி.  ஒன்றிய கவுன்சிலர் அழகு சிங்கம்,பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, மாவட்ட மீனவர் அணி துனை அமைப்பாளர் குமரன், மாவட்ட பிரதிநிதி செந்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள் குலாப், மோகன், சரவணன், ரூஹீத் மற்றும் நிர்வாகிகள் , ராஜூ, பெரியசாமி, அருள், தேவன், துரை உள்ளிட்ட அனைத்து நிலை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad