21,300 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் வழக்கறிஞர் அ.மணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 ஜூன், 2024

21,300 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் வழக்கறிஞர் அ.மணி.


இந்திய திருநாட்டின் 18வது பொதுதேர்தல் கடந்த மாதம் 19ஆம் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது, தமிழகத்தில் முதல் கட்டமாக கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது, இந்த தேர்தலில் தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திமுகவின் வழக்கறிஞர் மணி அவர்களும், பாஜக கூட்டணி சார்பில் பாமக தலைவர் மரு.அன்புமணியின் மனைவி திருமதி. சௌமிய அன்புமணி அவர்களும், அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவின் மரு.அசோகன் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரு. அபிநயா பொன்னிவளவன் அவர்களும் 24 சுயேட்சைகளும் போட்டியிட்டனர், இதில் மொத்தம் 12 லட்சத்து 38 ஆயிரத்து 183 வாக்காளர் வாக்களித்தனர்.


இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது, பாமகவின் வேட்பாளர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்களுக்கும் திமுகவின் வழக்கறிஞர் மணி அவர்களுக்கும் பலத்த போட்டி நிலவியது, பிற்பகல் வரை பாமக வேட்பாளர் முன்னிலையில் இருந்து வந்தார், அதன் பின்னர் திமுக வேட்பாளர் முன்னிலை பெற தொடங்கினார் முடிவில் திமுகவின் வேட்பாளர் வழக்கறிஞர் அ.மணி அவர்கள் 432667 வாக்குகளும், பாமக வேட்பாளர் திருமதி.செளமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஆர். அசோகன் 2,93,629 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்திலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி.அபிநயா பொன்னிவளவன் 65381 வாக்குகளும் பெற்றனர்.


திமுக வேட்பாளர் வழக்கறிஞர் மணி பாமகவின் வேட்பாளர் திருமதி. சௌமியா அவர்களை விட 21,300 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார், அவருக்கு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான திருமதி. சாந்தி அவர்கள் வெற்றி சான்றிதழை வழங்கினார், அப்போது அமைச்சர் திரு. MRK. பன்னீர்செல்வம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரு. DNV. S.செந்தில்குமார், திமுக மாவட்ட செயலர்கள் திரு.P.பழனியப்பன், திரு.தடங்கள்.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad