தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சின்ன முதலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன், இவர் இன்று மாலை 5 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள தனது மாந்தோப்பிற்க்கு சென்றார். அங்கு மாமரத்தில் 30 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து முனியப்பன் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக