தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நெக்குந்தி கிராமத்தில் சிலர் சட்ட விரோதமாக கர்ப்பிணி பெண்களின் கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறுவதாக ஜூன்.28, வெள்ளிக்கிழமை, இன்று மலை 5 மணிக்கு சுகாதாதார இனை இயக்குநர் டாக்டர் .சாந்தி அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் நெக்குந்தி கிராமத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது நெக்குந்தி கிராமத்தில் முத்தப்ப நகரில் உள்ள வீட்டில் சிலர் கர்ப்பிணி பெண்களின் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்தது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் விசாரித்ததில் தலா 13 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக பாலினம் கண்டறிந்த முருகேசன் (வயது.27), நடராஜ் (வயது.24), சின்னராஜ் (வயது. 25),மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த லலிதா (வயது. 36),ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஸ்கேன் மெஷின், மற்றும் மருத்துவ உபகரனங்களை பறிமுதல் செய்தனர். முருகேசன் ஏற்கனவே சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து சிறை சென்றவர் என்பது குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக