மை தருமபுரி அமரர் சேவை மூலம் 91 ஆவது ஆதரவற்ற உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 ஜூன், 2024

மை தருமபுரி அமரர் சேவை மூலம் 91 ஆவது ஆதரவற்ற உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


மை தருமபுரி அமரர் சேவை மூலம் 91 ஆவது ஆதரவற்ற புனித உடல் நல்லடக்கம் செய்தனர், இது குறித்து மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் கூறுகையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் விபத்தில் அடிபட்டுள்ளார். 


இவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி இருந்தவரை பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட இவரது உடலை பாலக்கோடு காவல் நிலைய காவலர் ஆனந்த்பாபு, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, பாப்பாரப்பட்டி அருணாசலம் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி புனித உடலை நல்லடக்கம் செய்தனர்.


மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 91 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். மை தருமபுரி அமைப்பினர் இருக்கும் வரை இங்கு யாரும் ஆதரவற்றோர் இல்லை என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மரணிப்பவர்களிடமும் மனித நேயம் பகிர்வோம், என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad