மாரண்டஅள்ளி திமுக சார்பில் பேரூராட்சி தலைவர் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஜூன், 2024

மாரண்டஅள்ளி திமுக சார்பில் பேரூராட்சி தலைவர் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி நான்கு ரோட்டில் முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவரும் பேரூர் கழக செயலாளருமான் வெங்கடேசன் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா மற்றும் உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் அப்துல் ரகுமான், கார்த்திகேயன், யதிந்தர், வடிவேல், முனிராஜ், குழந்தைவேலு, அபிராமி காந்தி, சிவகுமார், வெங்கடேசன் சுகந்தி ரமேஷ், செங்கல் மணி, மாதையன், ஆறுமுகம், அண்ணாதுரை, வைத்தீஸ்வரன், ஸ்டார் பாய், லியாகத் அலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad