பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 ஜூன், 2024

பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (06.06.2024) நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தாழ்வான பகுதிகளின் விவரப்பட்டியல், அவரசகால போக்குவரத்து வழித்தடங்கள், போக்குவரத்து ஊர்திகளின் விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் பற்றிய விவரப் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், சமுதாயக்கூடங்கள் / திருமணமண்டபங்கள், பள்ளிகள்  பற்றிய விவரப்பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை வெள்ள காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய தேவையான வாகனங்கள், தண்ணீர் டேங்க்குகள், போர்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்கள், உணவு சமைக்க பாத்திரங்கள், கேஸ் அடுப்புகள், நியாய விலைக்கடைகளில் தேவையான உணவு பொருட்களின் இருப்பு ஆகியன தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், சாலையோர மரங்கள் சேதமடைந்தால் மீட்பு பணிக்கு ஜேசிபி, புல்டோசர், மரங்களை வெட்டும் இயந்திரங்கள், போர்டபில் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட் நல்ல நிலையில் பராமரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளில் மழைநீர் தேங்காவண்ணம் முன்கூட்டியே சீர்படுத்த வேண்டும் எனவும், அணைக்கட்டுகள், ஏரிகளின் கரைப்பகுதியில் தேவையான அளவிற்கு மணல் மூட்டைகளை அடுக்கி தயார் நிலையில் வைக்கவேண்டும். அவசரக்காலங்களில் உதவிக்கு அழைக்க சுய உதவி குழுக்கள்/ தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியல், தொலைபேசி எண்கள் பட்டியல் தயார் நிலையில் வைக்க வேண்டும். 


நடமாடும் மருத்துவ குழுக்கள்,  அவர்களின் தொலைபேசி எண் விவரங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும், மழைக்காலம் தொடங்கும் முன்னரே  குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கா வண்ணம் சாலைகள் சீர்படுத்த வேண்டும், கழிவுநீர்கால்வாய்களை துர்வார வேண்டும், தெருக்களில் கொசு ஒழிப்பு மருந்து அடித்தும் குளோரின் பவுடர் தூவியும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,


அனைத்து குடிநீர் கிணறுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அனைத்தும் சுத்தப்படுத்தி தேவையான அளவு குளோரின் பவுடர் கலந்து குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் எனவும், அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்கள்  அனைத்திலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள மற்றும் கால்நடை உயிர் / மனித உயிர் சேதாரம் ஏற்படும் போது உடனடியாக நிவாரண உதவி  வழங்க பிரேத பரிசோதனை அறிக்கை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என சமந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


மேலும், அவசரத் தேவைகள் / உதவிகள் / பேரிடர் கால வீடு / கால்நடை / மனித உயிரிழப்பு / போக்குவரத்து பாதிப்பு / சேதங்கள் பற்றிய தகவல்களை  மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க  மாவட்ட கட்டுப்பாட்டு மைய இலவச தொலைபேசி எண் 1077-ல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி. இரா.காயத்ரி, திரு.வில்சன் ராஜசேகர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜெயந்தி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.தனப்பிரியா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. சுவாமிநாதன், வட்டாட்சியர்கள், வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.    

கருத்துகள் இல்லை:

Post Top Ad