தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள கோட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் மகபூப்ஜான் இவரது மகன் உசேன்கான் (15) பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார், இன்று இரவு வீட்டின் அருகே ஷபி என்பவரின் மகள் திருமணத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் இரும்பு பைப்பில் உள்ள சீரியல் பல்பை எதிர்பாராத விதமாக தொட்டத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் அருகில் இருந்தவர்கள் உசேன்கானை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர், இவரை பரிசோதித்த மருத்துவர்கள் உசேன்கான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக