காரிமங்கலத்தில் தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.மணி க்கு உற்சாக வரவேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 ஜூன், 2024

காரிமங்கலத்தில் தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.மணி க்கு உற்சாக வரவேற்பு.


காரிமங்கலத்தில் தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில்  வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு  உற்சாக வரவேற்பு - அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் கட்சி பாகுபாடின்றி செய்வேன் என பேச்சு‌.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மொரப்பூர் சாலையில், தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு மேளதாளங்கள்  முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


காரிமங்கலத்தில் உள்ள திமுக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்திற்க்கு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இன்று வருகை தந்தார், அவருக்கு வழி நெடுக பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் மேளதாளங்கள் முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும் தனது வெற்றிக்கு பாடுபட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் அணைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொண்டார்.


அப்போது பேசிய அவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் கட்சி பாகுபாடின்றி செய்வேன், என கூறியவர் இந்த வெற்றியை கழக தலைவர் தமிழக முதல்வர் மு.க.  ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிதாக தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், மாநில தீர்மான குழு உறுப்பினர் கீரை விஸ்வநாதன், பேரூராட்சி தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாலர்கள், கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad