காரிமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு மின்விபத்து பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 ஜூன், 2024

காரிமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு மின்விபத்து பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர்களுக்கு  மின்விபத்து பாதுகாப்பு பயற்சி  வகுப்பு உதவி செயற்பொறியாளர் மோகன் தலைமையில் ஜூன்.11, செவ்வாய்க்கிழமை, மாலை 4 மணிக்கு  நடைப்பெற்றது.


இப்பயிற்சி வகுப்பில் மின் ஊழியர்கள் எவ்வாறு பாதுகாப்புடன் மின் தொடர்களில் பணியாற்றுவது மற்றும் பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து பணி மேற்கொள்வது குறித்தும், பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்தும்   எடுத்துரைக்கப்பட்டது,


இப்பாதுகாப்பு பயிற்சி வகுப்பில் போர்மேன், ஒயர்மேன், மின் கணக்கட்டாளர்கள் மற்றும்  மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர். அணைவருக்கும்    மின் அழுத்தம் கண்டறியும் தலைக்கவசம் வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

Post Top Ad