பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 ஜூன், 2024

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.


பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரூர் வட்டாச்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் இம்ரான் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் இனபடுகொலையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது, இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் வஜ்ஜிரம், சிவலிங்கம், திமுக சார்பில் மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.முஜீப், சூர்யா வெங்கடேசன், விசிக சார்பில் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன், ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி, முருகன், ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad