தர்மபுரியிலிருந்து பெங்களுரு வரை புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரியிலிருந்து இராயக்கோட்டை வரை சாலை அமைக்கும் பணி முடிவடைந்ததையொட்டி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தும் போது முறையாக பயன்படுத்தாமல் விரைவாக செல்வதற்காக சர்வீஸ் சாலை வழியாக எதிர் திசையில் சென்று வருகின்றனர்.
இக்கூட்டத்திற்க்கு டி.எஸ்.பி சிந்து அவர்கள் தலைமை வகித்து பேசியதாவது, விரைவில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சாலையின் எதிர் திசையில் செல்லக் கூடாது, இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே செல்லாமல், சாலையோரம் உள்ள வெள்ளை கோட்டிற்க்குள் செல்வது பாதுகாப்பானது.
மேலும் ஹெல்மெட் அணியாமலும், குடித்துவிட்டும், செல்போனில் பேசியபடியும், அஜக்கிரதையாக செல்வதால், ஏற்படும் விபத்துக்களால், ஒழுங்காக சாலையில் செல்வோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இக்கூட்டத்தில் பாலக்கோடு போலீசார், மற்றும் பாறையூர், கொம்மநாயக்கனஅள்ளி, தீத்தாரஅள்ளி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக