காரிமங்கலம் பைபாஸ் சாலையில் உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 ஜூன், 2024

காரிமங்கலம் பைபாஸ் சாலையில் உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு மற்றும் உணவு பாதுகாப்பு புகார் செயலியில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானு சுஜாதா,  அவர்களின்  மேற்பார்வையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் காரிமங்கலம் பைபாஸ்சாலை, மொரப்பூர் ரோடு , தர்மபுரி ரோடு,  மற்றும் பாலக்கோடு செல்லும் சாலையில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் திரையரங்குகளில் உள்ள  கேன்டீன்களில் ஆய்வு செய்தனர். 


ஆய்வில் அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் காட்சிப்படுத்தப்பட்ட கார வகைகள், வடை பஜ்ஜிகளை அப்புறப்படுத்தி எண்ணெயில் செய்த பலகார வகைகளை அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் நேரடியாக பொட்டலம் இடுதலோ, வைத்து பரிமாறுதலோ  கண்டிப்பாக தவிர்க்க பட வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டது. 

பாலக்கோடு செல்லும் சாலையில் ஒரு உணவகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பேப்பரில்  பரோட்டா, களி உள்ளிட்ட உணவு பரிமாறப்படுதலை கண்டு நெகிழிப் பேப்பர்கள், நெகிழி கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உணவக உரிமையாளர்க்கு நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உடனடி அபராதம் 2யிரம் ரூபாய்  விதிக்கப்பட்டது. 


அசைவ, தாபா உணவகங்களில் வாங்கப்படும் இறைச்சிக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்க வலியுறுத்தப்பட்டது. நாள்பட்ட இறைச்சியோ,  சமைத்த இறைச்சியை குளிர்பதன பெட்டியில் வைப்பது, செயற்கை நிறம் ஏற்றி சேர்ப்பது கண்டிப்பாக தவிர்க்க வலியுறுத்தி எச்சரிக்கப்பட்டது. சமைத்த உணவுகளை உரிய வகையில் மூடியிட்ட கலன்களில் பராமரிக்காத மொரப்பூர் சாலையில் உள்ள ஒரு உணவகத்துக்கும் பாலக்கோடு சாலையில் உள்ள ஒரு உணவகம் என இரண்டு உணவகங்கள் மற்றும் உரிய வகையில் பராமரிப்பு மற்றும் தயாரிப்பு மேற்கொள்ளாத ஒரு கேக், ரொட்டி வகைகள் தயாரிக்கும் கடை என மூன்று கடை உரிமையாளர்களுக்கும் தலா ஆயிரம்  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad