தமிழ்நாடு கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொதுக் குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 ஜூன், 2024

தமிழ்நாடு கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொதுக் குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பாலக்கோடு பகுதியில் இன்று தமிழ்நாடு கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொதுக் குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதில் முக்கியமான பங்குதாரராக மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொருளாளர் செயலாளர் போன்றவர்கள் கலந்து கொண்டு பங்காற்றினர், இம்முக்கிய தீர்மானத்தில் ஆண்டுதோறும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மற்றும் இதில் அதிக பெண்களே இருப்பதால் இவர்களுக்கு பாதுகாப்பின் நலன் கருதி மாதந்தோறும் மாதவிடாய் காலங்களில் ஆண்களுக்கு இவர்களுக்கு விடுமுறை அளித்து அந்த விடுமுறை காலங்களில் அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஒரு நாள் விடுப்பு எடுத்தால் அதற்கும் சம்பளம் வழங்க கோரியும் இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்களை நிரந்தர பணி நியமனம் செய்யக் கூடிய நிறைவேற்றப்பட்டது இத்தீர்மானம் இதில் ஏராளமான கொசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad