நல்லூர் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி - போலீசார் விசாரனை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 ஜூன், 2024

நல்லூர் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி - போலீசார் விசாரனை.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சரவணகுமார் (வயது. 53) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது.45) என்பவருக்கும் நிலபிரச்சனையில் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார்.

அப்போது அரிவாளுடன் வந்த ரமேஷ் நிலத்தை உழக் கூடாது என கூறி டிராக்டர் டயரை வெட்டி பஞ்சராக்கினார், மேலும் சரவணகுமாரின் தலை, கை கால் பகுதிகளிலும் வெட்டி விட்டு தப்பி சென்றார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து  மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad