நல்லம்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் பொறுப்பாளர்களுக்கான, கேஸ் விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சி கருத்தரங்கு இன்று நடந்தது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஜூன், 2024

நல்லம்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் பொறுப்பாளர்களுக்கான, கேஸ் விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சி கருத்தரங்கு இன்று நடந்தது.


தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ் வாதார இயக்கம் சார்பில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், சமையல் செய்யும்  பொறுப்பாளர்களுக்கு, கேஸ் மூலம் ஏற்படும் விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு பயிற்சி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார மகளிர் திட்ட அலுவலகத்தில் இன்று நடந்தது. நல்லம்பள்ளி பிடிஓ லோகநாதன், மகளிர் உதவி திட்ட அலுவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கருத்தரங்கு பயிற்சிக்கு மகளிர் திட்ட அலுவலர் பத்ஹூமுகம்மதுநசீர் தலைமை தாங்கினார். 


இதில் இண்டன் கேஸ் மேலாளர் வில்சன் கலந்து கொண்டு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், கேஸ் அடுப்பு மூலம் குழந்தைகளுக்கு சமைத்து வழங்கப்படும் உணவு தயாரிப்பின் போது, கேஸ் அடுப்பை எவ்வாறு சமையளர்கள் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், விபத்து ஏற்பட்டால் அதனை உடனடியாக தடுக்கும் சுலபமான வழிமுறைகள் பற்றி விரிவாக எடுத்து கூறி, சமையல் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கி பேசினார். 


இந்த நிகழ்ச்சியில் வட்டார இயக்க மேலாளர் ரமேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர் பெருமக்கள், மற்றும் ஏராளமான பெண் சமையாளர்கள், இண்டன் கேஸ் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad