தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர கடைவீதி, எம்ஜிரோடு உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி ஆகும், இங்கே கடைகளில் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது.
ஜூன், 11. செவ்வாய்க்கிழமை இன்று நள்ளிரவு 2.20. மணிக்கு, எம்.ஜி. ரோடு பகுதியில் உள்ள ஒரு போட்டோ கடை முன்பு குப்பை பொறுக்குவது போல் டார்ச்லைட் அடித்து பெட்டியின் உள்ளே வைத்திருக்கும் பின் அடிக்கும் மெஷினை இலாவகமாக முதியவர் ஒருவர் எடுத்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக