இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் சதிஸ்குமார் கூறுகையில், மை தருமபுரி அமைப்பின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உறவினர்கள் இன்றி ஆதரவின்றி இறந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் சேவையை மை தருமபுரி அமரர் சேவை மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்து வருகின்றோம். இந்த புனித உடல் நல்லடக்கத்திற்கு உதவி வரும் பல நல்ல உள்ளங்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். புனித உடலை நல்லடக்கம் செய்யும் சேவைக்கு எங்கள் மீது நம்பிக்கை வைத்து முதல் வாய்ப்பினை வழங்கிய தருமபுரி நகர முன்னாள் காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் அவர்களுக்கு எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று பொம்மிடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துள்ளார். இவரை பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை. பொம்மிடி காவல் நிலைய காவலர்கள், எனது தலைமையில் மை தருமபுரி அமைப்பின் செயலாளர் தமிழ்செல்வன், அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், ஒருங்கிணைப்பாளர்கள் அருள்மணி, முஹம்மத் ஜாபர், விஜயகாந்த், செந்தில் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 100 ஆதரவற்று இறந்த புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளோம். ஆதரவின்றி இருப்போர்களுக்கு உறவாய் இருப்போம், மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம், என அவர் கூறினார். மை தருமபுரி தன்னார்வலர்கள் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக