நிகழ்ச்சியை வைகை தொண்டு நிறுவனம் NDSO - V4U Trust இணைந்து நடத்தியது, நிகழ்வில் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக 11 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதும், 32 ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச காலணியும் வழங்கப்பட்டது, மாணவர்களின் தனித் திறமையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்களும் ஆசிரிய பெருமக்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது,
இந்நிகழ்வில் NDSO - V4U Trust தொண்டு நிறுவனம் சார்பில் பிரகாஷ், வேணுகோபால், இளையராஜா, சௌந்தரராஜன் வாழ்த்துரை வழங்கினர்கள், பள்ளியின் தலைமையாசிரியர் பழனியப்பன் தலைமை உரை ஆற்றினார், விடுதலை வீரன், தங்கராஜ், வைகை NGO தலைவர் குமரேசன், காமராசரை பற்றி சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது, முன்னதாக இளந்தென்றல் சரவணன் நிகழ்ச்சிக்கு அனைவரையும் மாணவி வேணிஷா நிகழ்ச்சி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக