பாலக்கோடு, புலிக்கரை சுற்று வட்டார பகுதியில் வரும் 16ம் தேதி மின்நிறுத்தம் செய்வதாக அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஜூலை, 2024

பாலக்கோடு, புலிக்கரை சுற்று வட்டார பகுதியில் வரும் 16ம் தேதி மின்நிறுத்தம் செய்வதாக அறிவிப்பு.


தர்மபுரி மாவட்டம் வெள்ளிசந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, வெள்ளிசந்தை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பாலக்கோடு, மாரண்டஅள்ளி, புலிகரை சுற்றுவட்டார பகுதிகளான ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்ல அள்ளி, தண்டுகாரணஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, புலிக்கரை, கனவனஅள்ளி, அமானி மல்லாபுரம், பொரத்தூர், மோட்டூர், பஞ்சப்பள்ளி, பெல்லுஅள்ளி, பேவுஅள்ளி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, சோமனஅள்ளி, பத்தல அள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரபகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad