பாலக்கோடு அருகே பரபரப்பு நீதிபதி வீட்டில் 17 பவுன் நகையை மாற்றி போலியை வைத்துச்சென்ற மர்ம நபர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 ஜூலை, 2024

பாலக்கோடு அருகே பரபரப்பு நீதிபதி வீட்டில் 17 பவுன் நகையை மாற்றி போலியை வைத்துச்சென்ற மர்ம நபர்கள்.


பாலக்கோடு அருகே வீட்டின் பீரோவில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகைக்கு பதிலாக, போலி நகைகள் இருந்ததால் அதிர்ச்சியடைந்த நீதிபதியின் மனைவி, அதனை கண்டுபிடித்து தரும்படி போலீஸில் புகார் அளித்துள்ளார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார். 


இவர் பாலக்கோடு சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். தற்போது பணி மாறுதலாகி, திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நீதிபதியாக மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் குடும்பத்துடன் திருச்செங்கோட்டில் உள்ள நீதிபதி குடியிருப்பு பகுதிக்கு குடியேறினார்.


ஒரு பாதி பொருட்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில், பாலக்கோடு வீட்டில் இருந்த மற்ற பொருட்களை எடுத்துச் செல்வதற்காக, நேற்று முன்தினம் வந்துள்ளனர். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை, நீதிபதியின் மனைவி ஸ்ரீசத்யா எடுத்து பார்த்த போது, 17 பவுன் தங்க நகைக்கு பதிலாக, போலி நகைகள் இருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தார்.


இதுகுறித்து, பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad