பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான 2 நாள் ஹாக்கி போட்டி துவக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 ஜூலை, 2024

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான 2 நாள் ஹாக்கி போட்டி துவக்கம்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஹாக்கி கழகம் சார்பில் 17 வயதிற்க்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான   மாவட்ட அளவிலான 2 நாள் ஜூனியர் ஹாக்கி போட்டி துவக்க விழா  ஹாக்கி கழக இயக்குநர் ரங்கநாதன் நல்லசிரியர் தலைமையில் நடைப்பெற்றது.

இப்போட்டியினை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுநாதன் துவக்கி வைத்தார். இப்போட்டியில் பாலக்கோடு, பேகாரஅள்ளி, நரிப்பள்ளி, பி.அக்ராகரம், வெங்கட்டம்பட்டி, அரூர் உள்ளிட்ட அரசு பள்ளியை சேர்ந்த 7 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.


இப்போட்டியின் நடுவராக கருணாமூர்த்தி, குமரன், பிரபாகரன், குமரன், தெய்வானை, சென்பகவள்ளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இ ப்போட்டிக்கு  உடற்கல்வி ஆசிரியர்கள்  முனியப்பன்,  குமார், பார்த்தீபன், ரவீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் இரு அணிகளுக்கு கோப்பைகளும் மற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad