பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வருகின்ற 08.07.2024 அன்று நடைபெற உள்ளது. - கல்லூரி முதல்வர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 ஜூலை, 2024

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வருகின்ற 08.07.2024 அன்று நடைபெற உள்ளது. - கல்லூரி முதல்வர் தகவல்.


பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வருகின்ற 08.07.2024 அன்று நடைபெற உள்ளது.

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு B.A தமிழ், B.A ஆங்கிலம், B.Com, B.Sc கணிதம் மற்றும் B.Sc கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 08.07.2024 அன்று காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கலந்தாய்விற்கு ஏற்கனவே விண்ணப்பித்த மாணாக்கர்களும் மற்றும் தாமதமாக விண்ணப்பித்த மாணாக்கர்களும் பெற்றோர்களுடன் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கலந்தாய்விற்கு மாணவர்கள் தங்களது பெற்றோருடன் Online மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம். (மாணவர் மற்றும் பெற்றோர் கையொப்பத்துடன்), மாற்றுச் சான்றிதழ் (அசல் TC), 10 th , 11th மற்றும் 12th மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் (3 நகல்களுடன்) மற்றும் புகைப்படம் (5 பிரதி) ஆகியவற்றுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது, என பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்(மு.கூ.பொ) முனைவர் ஜா.பாக்கியமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad