கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்புகளை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்கள் கொண்டு தினசரி 1 முதல் 1:30 மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடிக் கல்வி எனும் தொலைநோக்குத் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை பாடல்கள், உரக்க படித்தல், வார்த்தை அட்டைகள், வாக்கிய அட்டைகள், குழுச் செயல்பாடு, மற்றும் தனிநபர் செயல்பாடு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட கற்றல் உக்திகளைக் கையாளவும் கணிதத்தில் எண்களை அறிதல், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட அடிப்படைச் செயல்பாடுகளை கற்பித்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களின் கற்றல் அடைவை அறிந்திடும் வகையில் ஒவ்வொரு அலகு இறுதியிலும் OMR தாளைக் கொண்டு மதிப்பீடு செய்யவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள் மற்றும் நாகேந்திரன் ஆகியோர் இப்பயிற்சியை பார்வையிட்டு மாணவர்களின் திறனை மேம்படுத்த தன்னார்வலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இப்பயிற்சிக்கான கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் அருண்குமார், முனியப்பன், மோகன் மற்றும் ஆசிரியர் ஜெயராமன் ஆகியோர் செயல்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக