சோமனஅள்ளியில் மது அருந்தும் பாரில் அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது ஒருவர் தலைமறைவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 ஜூலை, 2024

சோமனஅள்ளியில் மது அருந்தும் பாரில் அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது ஒருவர் தலைமறைவு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. அதன் அருகே மது அருந்தும் பார் செயல்பட்டு வருகிறது.


மது அருந்தும் பாரில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் திடிர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு 22 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள பீர் மற்றும் குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


அதனை தொடர்ந்து மது விற்பனையில் ஈடுபட்ட மதுபார் ஊழியர்கள் சுரேஷ் (வயது.42) ஹரிகரன் (வயது.22) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான கார்த்திக்(வயது.42) என்பவரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad