ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து விடப்பட்ட 2 சடலங்களை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டனர், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கடந்த 15நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் உன்சனஹள்ளியை சேர்ந்த சித்தப்பா ஜி வயது 39. கார்பெண்டர். இவரது மனைவி 9 மாத கர்ப்பிணி சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த, இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முத்தத்தி ஆஞ்சநேயர் கோவில் காவிரி ஆற்றில் குளித்த போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது உடலை நேற்று ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டனர்.
அதேபோல் சின்னாறு பரிசல் துறையில் 55 வதுக்க மற்றொரு அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக