ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - வினாடிக்கு 3000 கன அடியாக நீடித்து வருகிறது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 ஜூலை, 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - வினாடிக்கு 3000 கன அடியாக நீடித்து வருகிறது.

கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில்   கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீரால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் தொடர்ந்து மூன்று நாட்களாக வினாடிக்கு 1500 கன அடியாக நீடித்து வந்தன. இந்த நிலையில் இன்று காலை நேர நிலவரப்படி நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 3000 கன அடியாக நீடித்து வருகிறது. 


இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட கருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

கருத்துகள் இல்லை:

Post Top Ad