தருமபுரி மாவட்டம், இண்டூர், பவர்கிரிட் கார்பொரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் சார்பாக கார்பொரேட் சமூக பொறுப்பு கொள்கை திட்டத்தின் கீழ் ரூ.3.21 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 16.07.2024 அன்று கையெழுத்தானது.
தருமபுரி மாவட்டம், இண்டூர், பவர்கிரிட் கார்பொரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் சார்பாக கார்பொரேட் சமூக பொறுப்பு கொள்கை 2024-25 திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை அரூர் பயன் பெரும் வகையில் ₹3,21,00,000/- (ரூபாய் மூன்று கோடி இருபத்து ஒரு இலட்சம் மட்டும்) மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் மரு.சாந்தி, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி மற்றும் பவர்கிரிட் கார்பொரேஷன் முதன்மை பொது மேலாளர் திரு.ஜே.பி.ஜெயபிரகாஷ், முதன்மை துணை பொது மேலாளர் திரு.எம்.பாலு அவர்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 16.07.2024 அன்று கையெழுத்தானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக