ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 ஜூலை, 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.


கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு தொடர்ந்துவெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. இதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி , ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.


கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது .மற்ற அனைவரும் வேகமாக நிரம்பி வருகின்றன .கபினி அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 70   ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரித்துள்ளது நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.


இந்த வரத்து  படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மாலை 3 மணி நிலவரப்படி 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிப்பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது எனவே ஒகேனக்களுக்கு இன்று காலைக்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


ஒகேனக்கலுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நாடார் கொட்டாய், ஊட்டமலை, சத்திரம், மற்றும் நெருப்பூர் உள்ளிட்ட காவிரிகரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறுஎச்சரிக்கை விடப்பட்டது. மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர்காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.


காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad