தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் மருந்துகளை பாதுகாத்து பயன்படுத்தும் வகையில் குளிர்பதனகலம் 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டது.
இதன் மூலம் பாம்புக்கடி, நாய்க்கடி, விஷ ஜந்துக்கள் கடிப்பதல் ஏற்படும் நோய் மற்றும் நீரழிவு நோய்க்கான இன்சுலின் மருந்துகள், டயாலிசஸ் நோயாளிகளுக்கான எரித்ரோபாய்டின் மற்றும் ஆய்வக வேதி பொருட்கள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளை கெட்டு போகாமலும், வீரியம் குறையாமலும் பாதுகாத்து நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த புதிய குளிர்பதன கலத்தை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாந்தி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கினார்.
இந்நிகழ்சியில் தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருத்துவர்கள் சசிரேகா, அனிதா, மஷாலினிருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக