தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மாரண்டஅள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாரண்டஅள்ளி சந்தைவீதி மற்றும் அமானமல்லாபுரத்தில் வீட்டில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் சந்தை வீதியை சேர்ந்த மங்கா(வயது.70), அமானி மல்லாபுரத்தை சேர்ந்த இளங்கோ (வயது.55) என்பதும் வீட்டில் வைத்து அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது, இருவரிடமிருந்தும் 8ஆயிரத்து 820 ரூபாய் மதிப்புள்ள 280 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக