தருமபுரி பகுதியில் பல்வேறு சமூக நலப்பணிகளை செய்துவரும் மை தருமபுரி அமைப்பினர் "மை தருமபுரி அமரர் சேவை" என்கிற பெயரில் ஆதரவற்ற அல்லது உரிமை கோராத உடல்களை நல்லடக்கம் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று ஆதரவற்ற ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்தனர், இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் சதீஸ்குமார் கூறுகையில், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துள்ளார். இவரைப் பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை. தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து இன்று காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் வாசன், காவலர் ரமேஷ் குமார், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், தமிழ்செல்வன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 98 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம், என அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக