விபத்தில் சிக்கிய நண்பர்களை மீட்க சென்ற நண்பர்கள், கார் மோதி 2 பேர் சம்பவ இடத்தில் பலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 ஜூலை, 2024

விபத்தில் சிக்கிய நண்பர்களை மீட்க சென்ற நண்பர்கள், கார் மோதி 2 பேர் சம்பவ இடத்தில் பலி.



கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது நம்சி (வயது.24) பெங்களூரில் உள்ள  தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இப்ராஹிம் மகன் முகமதுபின்சாத், (வயது.24.) பெங்களூரில் தனியார் கல்லூரியில்  ரேடியாலஜி படித்து வந்தார். இவர்களின் நண்பர்கள் அன்சர், ரசீத் ஆகிய நால்வரும், இரண்டு மோட்டார் சைக்கிளில்களில்  பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு, பெங்களூர் -சேலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

தர்மபுரி மாவட்டம்  மகேந்திரமங்கலம் அருகே பெரியதப்பை பகுதியில் வந்த கொண்டிருந்த போது அன்சார், ரசித் வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் இருவரும் சாலையில் விழுந்தனர், இவர்களை முகமது நம்சி, முகமதுபின்சாத் ஆகிய இருவரும் மீட்டு கொண்டிருந்தனர், அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த சொகுசுகார் இருவரும் மீதும் மோதியது, இதில் முகமது நம்சி, முகமதுபின்சாத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.


இதுகுறித்து தகவலிறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று   இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சொகுசு காரை ஓட்டி வந்த பெங்களூர் ஜே.பி.நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது.34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

Post Top Ad