தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே பெரியதப்பை பகுதியில் வந்த கொண்டிருந்த போது அன்சார், ரசித் வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் இருவரும் சாலையில் விழுந்தனர், இவர்களை முகமது நம்சி, முகமதுபின்சாத் ஆகிய இருவரும் மீட்டு கொண்டிருந்தனர், அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த சொகுசுகார் இருவரும் மீதும் மோதியது, இதில் முகமது நம்சி, முகமதுபின்சாத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலிறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சொகுசு காரை ஓட்டி வந்த பெங்களூர் ஜே.பி.நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது.34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக