தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி தலைமையில் நடைப்பெற்றது. வெள்ளிசந்தை நான்கு ரோட்டில் தொடங்கிய இந்த பேரணியை கோட்ட பொறியாளர் நாகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியானது மாரண்டஹள்ளி சாலை, ஓசூர் செல்லும் சாலை, காரிமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று தலைகவசம் உயிர் கவசம், தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பை தடுப்பீர், சாலையில் அலைபேசி ஆபத்தாகும் நீ யோசி, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர், மிதவேகம், மிக நன்று உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி, உதவி பொறியாளர் ரஞ்சித், சாலை ஆய்வாளர் அந்தோனி மற்றும் 50 க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக