தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கணபதி கொட்டாய் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி செம்மண் எடுப்பதாக பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகத்திற்க்கு இரகசிய தகவல் கிடைத்தது,
இதையடுத்து தாசில்தார் ஆறுமுகம் இன்று மாலை 5 மணிக்கு கணபதி கொட்டாய் பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் டிராக்டரில் செம்மண் அள்ளி கொண்டிருந்தவர்கள் தாசில்தாரை கண்டதும் டிராக்டரை விட்டு விட்டு தப்பியோடினர்.
1 யூனிட் செம்மனுடன் 3 இலட்ச ரூபாய் மதிப்புள்ள டிராக்டர் மற்றும் டெய்லரை பறிமுதல் செய்து பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடி தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக