கண்டு கொள்ளாத மின்சார வாரியம் -குறைந்த மின் அழுத்தத்தால் திடீர் திடீர் என பழுதாகும் மின் சாதனங்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 ஜூலை, 2024

கண்டு கொள்ளாத மின்சார வாரியம் -குறைந்த மின் அழுத்தத்தால் திடீர் திடீர் என பழுதாகும் மின் சாதனங்கள்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி 10வது வார்டு, பள்ளிகூடத்தான் காலணியில் சுமார் 2500 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்விநியோகம் செய்து வருகின்றனர்.


ஆனால் வீடுகளின் அதிகரிப்பிற்க்கு ஏற்றவாறு டிரான்ஸ்பார்ம் தரம் உயர்த்தப்படவும் இல்லை, வேறு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவில்லை, இதனால் போதிய அளவிற்க்கு மின்சாரம் இன்றி குறைந்த தாழ்வழுத்தம் ஏற்பட்டு டிவி, பேன், மிக்சி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றது. 


இது குறித்து பொதுமக்கள் மற்றும் பாலக்கோடு பேரூராட்சி அலுவலர், தலைவர் மின்வாரியத்திற்க்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை கண்டுக்கொள்ளாததால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad