கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் உள்ள ஜே.பி.நகரில் வசிந்து வந்தவர் பரத்வாஜ் (வயது. 28) இவருக்கு இன்னும் திருமனம் ஆகவில்லை. இவர் பெங்களுரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் ஓகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் மாலை பெங்களுரு நோக்கி சென்று கொண்டிருந்தார், பாலக்கோடு அருகே கல்கூட அள்ளி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த மினி சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்தவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக