இதுகுறித்து, கடத்தூர் வருவாய் அலுவலர் மாதேஸ்வரன் அவர்களிடம். தொலைபேசியில் செய்தியாளர்கள் கேட்டபோது, பசுவாபுரம் அடுத்த ஓசூர் கிராம சாலை பகுதியில் உள்ள மரங்களை வெட்டியது எனக்கு தெரியவந்தது, உடனடியாக கிராம நிர்வாக அலுவலரை தொடர்புகொண்டு மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தும்படி உத்தரவிட்டேன், சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்லும் முன் அவர்கள் மரங்களை வெட்டி பிக்கப் வாகனத்தில் லோடு ஏற்றி எடுத்துச் சென்றுவிட்டனர்.
நாளை, செவ்வாய்க்கிழமை நில அளவீடு செய்ய அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நில அளவீடு செய்த பின்னர், நெடுஞ்சாலை மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் வெட்டப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டால், அந்த மரத்திற்கான அபராத தொகை கருவூலத்தில் ' கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக