அம்பாளப்பட்டி பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள்; கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 ஜூலை, 2024

அம்பாளப்பட்டி பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள்; கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.


சமீப காலமாக பல்வேறு இடங்களில் தெருநாய்களின் கோர தாக்குதலுக்கு ஆளாவது அதிகரித்து வருவது அனைவரும் அறிந்தது, இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பாசுவபுரம் ஊராட்சிகுட்பட்ட அம்பாளப்பட்டி பகுதியில் சாலையோரப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றது.


அப்பகுதியில் அதிகளவில் குழந்தைகளும்,  பள்ளி மாணவ மாணவிகள் சென்று வருவதால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர், ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad