தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடந்தது. இம்முகாமிற்க்கு பேரூராட்சி செயல் அலுவலர் முத்து முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவிணர், தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய், தோல் நோய், கேன்சர் உள்ளிட்ட நோய்கள் குறித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இம்முகாமில் சுகாதார ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், தலைமை எழுத்தர் அபுபக்கர் மற்றும் அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக