தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்,பொம்மிடி அருகே உள்ள சுங்கரஅள்ளியில் அச்சீவர்ஸ் அகாடமி ஆங்கிலப்பள்ளியை உலகளாவிய கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் எம்.எம். ஐ அருட்தந்தையர்கள் நடத்தி வருகின்றனர்.
ஜனநாயக முறைப்படி, வாக்கு எண்ணிக்கையில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களின் பதவியேற்பு விழாவில் கடத்தூர் காவல்துறை முதன்மை அதிகாரி சுகுமார் முதன்மை விருந்தினராகவும், பொம்மிடியில் மிகப்பிரம்மாண்டமாக உருவெடுத்து வரும் பலூன் தியேட்டரின் உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான மருத்துவர் ரமேஷ் கௌரவ விருந்தினராகவும், ஆங்கில துறையில் முனைவர் பட்டம் பெற்று, தற்போது சென்னையில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி கொண்டிருக்கும் திருத்துறை சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு, மாணவர்களோடு கலந்துரையாடி, தலைமைத்துவத்தின் முக்கிய அம்சங்களை சிறு வயதிலிருந்தே வாழ அழைப்பு விடுத்தனர்.
பள்ளியின் அதிபர் அருட்தந்தை ஜான் மில்லர், பள்ளியின் முதல்வர் செல்லதுரை, தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியரை பாராட்டி, இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக