தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி துணை மின் நிலையத்திற்க்குட்பட்ட பாளையம், போடரஅள்ளி, முறுக்கன்கொட்டாய் கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் தொடக்க வெள்ளி சந்தை துணை மின் நிலைய செயற்பொறியாளர் வனிதா அவர்களின் தலைமையில் நடந்தது.
பாளையம், போடரஅள்ளி, முறுக்கன்கொட்டாய் கிராமங்களில் குறைந்த மின் அழுத்தத்தால் மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாகி வந்த நிலையில் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாரண்டஅள்ளி துணை மின் நிலையம் சார்பில் நுகர்வோருக்கு மேம்படுத்தப்பட்ட மின்சேவை வழங்கும் நோக்கில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. இந்த புதிய மின்மாற்றிகளை பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா, உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவி பொறியாளர்கள் திவாகர், சத்யா, மின்வாரிய பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக